மாகாணமட்ட கணித ஒலிம்பியாட் போட்டியில் செல்வி கருணிகா மயூரன் அவர்கள் தெரிவாகி தேசிய மட்டப்போட்டியில் பங்குபற்றும் பேற்றை ஈட்டி கல்லூரி அன்னைக்கு பெருமை சேர்த்துள்ளார்.அவ்வெற்றிக்காக உழைத்த மாணவியையும் பயிற்சிகளை வழங்கி வெற்றிபெற அயராது உழைத்த திரு.ச.சதீஸ்வரன் ஆசிரியரையும் இவர்களுக்கான கணிதபாட ஆசிரியர்களாக இருந்து நாளும் பயிற்சியும் ஊக்கமும் அளித்து வரும் திருமதி பா.பிரணவரூபன்,திருமதி வாணிமலர் சுதர்சன்ஆகியோரையும் அவர் தம் பெற்றோரையும் பாராட்டி வாழ்த்தி நன்றி கூறி மகிழ்வைப் பகிர்கின்றோம்