கனிஷ்ட பிரிவினருக்கான தேசிய மட்ட மெய்வல்லுநர் போட்டிகள் கொழுப்பு தியகம மைதானத்தில் (13.06.2025) வெள்ளிக்கிழமை முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன. இதில் 20 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கான கோலூன்றி பாய்தல் போட்டியில் எமது கல்லூரி மாணவி எஸ்.நிருஷிகா 3.40 மீற்றர் உயரம் பாய்ந்து புதிய சாதனையை பதிவு செய்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளார். மற்றும் எஸ்.டிலக்சிகா 3.10 மீற்றர் உயரம் பாய்ந்து வெண்கல பதக்கத்தையும் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.